Wednesday, June 20, 2007

"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா.!

[புதன்கிழமை 20 யூன் 2007]


"தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது.

"சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது.

"தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய முடக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" நாளிதழை தீக்கிரையாக்கினர். இணைய உலகம் உருவான பின்பு முதல் முறையாக "தமிழ்நெட்" இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் நடத்த அனைத்துலக ஊடக அமைப்பினர் வருகை தர உள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அனைத்துலகத்தின் முன்பாக- ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முன்பாக- மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவோரின் முன்பாக இந்த விடயத்தை "தமிழ்நெட்" முன்வைக்கிறது" என்றும் தனது செய்தியில் "தமிழ்நெட்" தெரிவித்துள்ளது.

ஒரு ஊடக நிறுவனத்தின் ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் பறித்திருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வரும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் ஒரு அங்கமாகவே "தமிழ்நெட்" முடக்கத்தை "புதினம்" இணையத்தளமும் கருதுகிறது. சிங்களப் பேரினவாதத்தின் இந்த அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலில் "புதினம்" தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

மூலம்: புதினம்

3 comments:

  1. தமிழ்நெற் செய்தியோடைகளை வழங்குகிறது. அவற்றை கூகுள் றீடர் போன்ற ஏதாவதொன்றில் இட்டு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.


    http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi...ww.tamilnet.com

    ReplyDelete
  2. சமர்களில் இலங்கை படைத்தரப்பு சந்திக்கும் படுதோல்விகள் பற்றிய செய்திகள் சிங்கள மக்களை சென்றடைய கூடாது என்பது தான் காரணம். விடுதலைப் புலிகளால் மீட்கப்படும் படையினரது சடலங்களை அவர்களது பெயர், முகவரி, இராணுவ இலக்கம், தேசிய அடையாள அட்டையின் இலக்கம் போன்ற விபரங்களுடன் தமிழ் நெற் பிரசுரித்து வந்தது இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பாரிய இடையூறாக இருந்திருக்கும் அது தான் இந்த தடை.

    ReplyDelete
  3. கொழும்பில் தமிழர் வெளியேற்றம், இந்தியாவின் இரகசிய ஆயுத உதவி, தமிழ் நெட்டின் முடக்கம், 50000 இராணுவ வீரர் சேர்ப்பு இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது அடுத்த சில மாதங்களில் சிறீலங்கா படையினர் பெரும் யுத்தம் ஒன்றிற்கு தயார் செய்கிறார்கள் போல் தான் தெரிகிறது. நன்றாக வாங்கிக்கட்டப் போகிறார்கள்

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.