Tuesday, June 12, 2007

மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை.!!

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007] மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டி நாகதம்பிரான் கோவில் வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.35 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது தம்மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட 4 இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வந்தாறுமூலை பௌண்டரி வீதியைச் சேர்ந்த எஸ்.மனோகரன் (வயது 22) என்ற இளைஞர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் மாவடிவேம்பு தொடரூந்து பாதைக்கு அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டது. சித்தாண்டியிலிருந்து தனது வீட்டுக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில் கடத்தப்பட்டார். மட்டக்களப்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் சித்தாண்டி உள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.