Sunday, June 10, 2007

குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36மணிநேர மோதலில் 10 போராளிகள் வீரச்சாவு.!!

[ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007] விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36 மணிநேரப்பகுதியில் சிறீலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் 10 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினர் வீரச்சாவடைந்த எட்டு போராளிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. பாலமடு, மாவடி ஓடை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது இவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா படைகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா வான்படையினர் கடுமையான வான்வழித்தாக்குதல்களை குடும்பிமலைப்பகுதியில் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது. மூலம்: பதிவு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.