Monday, June 04, 2007

மன்னாரில் படையினர் மீது அதிரடித் தாக்குதல்: 30 படையினர் பலி- 7 ஆட்டிலெறிப் பீரங்கிகள் தாக்கியழிப்பு.!!!

[ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007]

மன்னாரில் பாரிய படை நகர்வுக்காக முன்னகர்ந்திருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் அதிரடித் தாக்குதல் நடத்தி, படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி பின்தள்ளியுள்ளனர்.
இத்தாக்குதலில் படையினரின் சடலங்கள், போர்க்கலங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருந்து பாரிய படை நடவடிக்கைக்காக பரிசங்குளம், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு சிறிலங்காப் படையினர் நகர்ந்திருந்தனர்.

............................................. கைப்பற்றப்பட்ட இராணுவ கவச ஊர்தி..................................



இந்நகர்வுப் படையினர் மீது நேற்று சனிக்கிழமை மாலை 7 மணிமுதல் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து பாரிய இழப்புக்கள் படையினருக்கு ஏற்பட்டன. பாரிய இழப்புக்களுடன் படையினர் பின்தளப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.



படையினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பாரிய படை நடவடிக்கைக்காக வவுனியா பம்பைமடுவில் படையினர் வைத்திருந்த ஏழு ஆட்டிலெறிப் பீரங்கிகள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவில் ஆட்டிலெறி எறிகணைகள், வெடிபொருட்கள் என்பனவும் குவிக்கப்பட்டிருந்தன.

படையினரின் இரண்டு ஆட்டிலெறிகள் முற்றாக சேதமாகியுள்ளதாக கொழும்பு சிங்கள இணைய ஊடகம் ஒன்று படைத்தரப்பு தகவலை ஆதாரமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினருக்கு அழிவுகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பெருமளவில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான படையினர் காயமடைந்தும் உள்ளனர்.



கொல்லப்பட்ட படையினரின் 15 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவ கவச ஊர்தி - 01

ட்றக் ஊர்தி - 01

பிகே எல்எம்ஜிக்கள்

ஏகே எல்எம்ஜிக்கள்

ரி-56 ரக துப்பாக்கிகள்

40 மில்லி மீற்றர் குண்டு செலுத்தி

60 மில்லி மீற்றர் மோட்டார்கள்

மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெற்றிகரமான இந்நடவடிக்கையில் தமது தரப்பில் 18 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

படங்கள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

மூலம்: புதினம்

5 comments:

  1. படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை நிற மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட பதுங்கு குழி வட்ட வடிவில் இருக்கின்றதே? வித்தியாசமாக இருக்கின்றது! இதனுள் இருந்துதான் சிறீலங்கா படையினர் நாங்கள் நேர்சரியில் விளையாடிய பசுவும், புலியும் விளையாட்டு விளையாடுவீனமோ?

    ReplyDelete
  2. மண்ணிற்காய் மரணித்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. வன்னிப் பகுதிக்குள்ளே அங்குலம் அங்குலமாக முன்னேறிய இராணுவம் மீண்டும் பழைய இடங்களிற்குப் போகவேண்டி வந்துவிட்டது.. கிழக்கு மாதிரி வடக்கையும் கைப்பற்றலாம் என்ற திட்டம் பலிக்காது.. சிங்களவர்களுக்கு "சாண் ஏற முழம் சறுக்கும்" என்பது இனித்தான் புரியும்!

    ReplyDelete
  4. எமது விடுதலைக்காக மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்...

    ReplyDelete
  5. புலிகளின் நேரடித் தாக்குதழில் தாக்கியழிக்க பட்டது மோட்டார் ஏவுகனைத்தளம், புலிகளின் எறிகணைத்தாக்குதளில் தாக்கியழிக்க பட்டது ஆட்லெறி ஏவுகனைத்தளம், ஆட்லெறி ஏவுகனைத்தளத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடக்கும் நேரத்தில் (Divert செய்து) மோட்டார் ஏவுகனைத்தளம் மீது நேரடித் தாக்குதல் நடந்திருக்குமோ???

    7 ஆட்லெறி என்பது மிகப்பெரிய இழப்பு….. ஆதாவது அந்த ஆட்லெறி தளமே தாக்கியழிக்க பட்டு விட்டது. அப்ப அந்த தளத்தில் இருந்த ஆமி????

    30 ஆமிதான் விடுதபை;புலிகள் கண்டது, ஆதாவது, புலிகளின் நேரடித் தாக்குதழில் தாக்கியழிக்க பட்ட மோட்டார் ஏவுகனைத்தில் மட்டும். புலிகளின் எறிகணைத்தாக்குதளில் தாக்கியழிக்க பட்ட ஆட்லெறி ஏவுகனைத்தளத்தில் 7 ஆட்லெறியும் தாக்கியழிக்க பட்டு விட்டது என்றால் ( ஒரு ஆட்லெறி ஏவுகனைத்தளத்தில் மொத்தமாக 7 ஆட்லெறிகள் தான் நிற்க்கும்.) அப்ப அந்த தளத்தில் 7 ஆட்லெறிகளும் சிதறிவிட்டன, அந்த தளத்தில் இருந்த ஆகக்குறைந்தது 80 ஆமியும் எங்கே????

    இக்களத்தில் வித்தாகி போன மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்.


    kumar

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.