[புதன்கிழமை, 30 மே 2007] இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிறீலங்காவைச் சேர்ந்த இருவரைக் கைது செய்திருப்பதாக, அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு போலியான கடவுச்சீட்டுக்கள், 520 மில்லியம் றுபியா (58,000 டொலர்), 1,003 டொலர், மற்றும் சில கடனட்டைகளைக் கைப்பற்றி இருப்பதாக, காவல்துறை ஆணையாளர் பச்ரியர் ஹசனுதீன் ரம்புனன்ஹே தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்க முன்னர் அவுஸ்திரேலிய கடற் பரப்பில் கைது செய்யப்பட்ட 83 பேரையும் இவர்களே அனுப்பி வைத்ததாகவும், அதற்காக 100 முதல் 150 மில்லியன் றுபியா ஒவ்வொருவரிடமும் இவர்கள் பெற்றிருப்பதாகவும் இந்த அதிகாரி மேலும் கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற 83 இலங்கையர்களையும் நவ்று என்ற தீவுக்கு திருப்பி அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய அரசு, அவர்களை அகதிகளாக ஏற்க முடியாதென அறிவித்திருந்தது. இவர்கள் அனைவரும் நவ்று தீவிலிருந்து இந்தோனேசியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், அவர்களை சிறீலங்காவிற்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்தோனேசிய அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 30, 2007
இந்தோனேசியாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் சிறீலங்காவைச் சேர்ந்த இருவர் கைது.
Wednesday, May 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.