Wednesday, May 30, 2007

கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்.!!

[புதன்கிழமை, 30 மே 2007]


சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன.

இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது:

இந்த கொள்ளை வழிகாட்டியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பணி தொடர்பாக இலங்கை மக்களின் நம்பிக்கையை கட்டி எழுப்பும் நடவடிக்கை. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கும், அபிவிருத்திக்குமாக உதவிகள் வழங்கப்படும். அது மோதல்களை ஊக்குவிப்பதற்கோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதற்கோ அல்ல. அவர்கள் அதனை தெளிவாக உறுதிசெய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணம் தொடர்பாக பேரனர்த்த, முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டி ஆவணம் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்காத வரை அரசு அதற்கு ஆதரவு வழங்கும். அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானால் அரசுக்கு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டு. அதன் மீதான விசாரணைகளும் நடத்தப்படும். எனினும் விசாரணைகள் நிறைவுபெறும் வரை எந்த பெறுமதியான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

இது தொடர்பில் கனேடிய தூதுவரான அஞ்ஜெலா போக்டன் தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டியானது ஒரு தெளிவான நடைமுறை, அது என்ன செய்யப்படுகின்றது, ஏன் செய்யப்படுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டும்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக பெருமளவான தவறான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எப்படி பணிகளை நடைமுறைப்படுத்துவது என்பதை நாம் ஆராய்ந்தால், முதலில் நாம் நிபுணத்துவமுள்ள பங்குதாரர்களை நியமிக்க வேண்டும். பின்னர் அதிகளவு முக்கியமானதை நாம் செய்ய வேண்டும் என்றார்.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.