Wednesday, May 30, 2007

கருணா குழுவுடன் முரண்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுட்டுக்கொலை.!!

[புதன்கிழமை, 30 மே 2007]


அம்பாறை கல்முனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் உந்துருளியில் சென்ற இரண்டு இனம் தெரியாதோரால் நேற்று காலை 7.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கல்முறை அம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய இளையதம்பி சாந்தகுமார் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் இவர் முன்னர் நேரடியாக முரண்பட்டிருந்தவர் எனவும், கருணா ஒட்டுக் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது சாந்தகுமாரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 38 வயதுடைய ஆதம்பாபா ஜபார் படுகாயமடைந்து கல்முனை ஆதார மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.