Monday, May 28, 2007

உண்மையைக் கூற மறுத்துவரும் அதிகாரிகள்.

[திங்கட்கிழமை, 28 மே 2007]


யாழ் குடா நாட்டில் கடமையாற்றும் பல உயர் அதிகாரிகள் உண்மையைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தாது ஏமாற்றிவருகின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் மீது கட்டுப்பாட்டு விலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் எந்த வகையான நடவடிக்கையையும் இந்த அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொள்வதில்லை. வர்த்தகர்கள் குறிப்பிடும் விலையை இவர்கள் சட்டப்படி பொது மக்களுக்கு ஏற்று வெளிப்படுத்தும் நடவடிக்கையே இடம் பெற்று வருகின்றது.

விலைப்பட்டியல் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படுவதும் இல்லை. கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்கள் விற்க்கப்படுவதும் இல்லை. வெறுமனே பொருட்களின் கட்டுப்பாட்டு விலையென ஒரு விலையை வர்த்தகர்கள் அரச அதிகாரிகள் மூலம் குறிப்பிடடு பின்னர் அதிலும் பார்க்க கூடிய விலைக்கு விற்க்கும் நிலமையே காணப்படுகின்றது.

இதே போன்று கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வலிகாமம் பகுதிக்கான தொலைத் தொடர்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இத்துடன் அண்மையில் சிற்றி லிங் இனைப்பு மூலம் இணைப்புகள் வலிகாமம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போதிலும் தற்போது யாழ் குடா நாட்டு மக்களின் பணத்தை சுரண்ட விருப்பமில்லை யென்பதைப் போன்ற ஒரு கற்பனையை ஏற்படுத்தி இன்னும் இரு வாரத்தில் 12 ஆயிரம் ரூபா விலையில் தொலை பேசிகள் விலை குறைந்துள்ளமையால் அதன் பின்னர் இன்னும் இரு வார காலத்தில் குறிப்பி;ட இணைப்புகள் வழங்கப்படும் என ஊடகங்கள வாயிலாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சிற்றி லிங் வழங்குவதற்கான அனுமதியை இராணுவத் தலைமையகம் வழங்க மறுத்துள்ள போதிலும் தமக்கு மட்டும் குறிப்பிட்ட இணைப்புகளை வழங்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது இதனை குறிப்பிட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவிக்காது ஏமாற்றி வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.