Monday, May 28, 2007

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக படையினரும் பொலிஸாரும் குவிப்பு.

[திங்கட்கிழமை, 28 மே 2007]


யாழ். பல்கலைக்கழகம் இன்று வழமை போன்று இயங்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவாகள் கடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைப்பயமுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து வகுப்புக்களைப் பகிஸ்கரித்து வந்தார்கள்

யாழ்ப்பாணத்தின் கல்விமான்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் வழங்கிய உறுதி மொழிகளைத தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள்

இதே நேரம் பல் கலைக்கழக சுற்றாடலில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமைக்கு மாறாக அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாhகள் குறிப்பாக பல்கலைக்கழக பிரதான வீதியின் முன்பாக பொலிஸாரும் படையினரும்; துப்பாக்கிகளை சுடு நிலையில் ஏந்திய வண்ணம் கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்

அத்துடன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிட வாசல் பிறவுன்றோட் சந்தி வளாக பின்புறம் என நான்கு புறமும படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு இருந்ததுடன் இளம் வயதினரை சோதனைகளு;க்கும் உட்படுத்தினார்கள்

இந்தப் பகுதியில் வழமைக்கு மாறாக படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு இருந்தமையால் இந்தப் பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் மத்தியில் பெரும் பதட்டமான நிலமை காணப்பட்டது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.