[திங்கட்கிழமை, 28 மே 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள இரத்மலானையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இரத்மலானை பெல்லக்கடைச் சந்தியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது. கட்டுக்குருந்தவில் இருந்து கொனகெனவுக்கு சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து நடதத்தப்பட்ட இத்தாக்குதலில் 4 சிறப்பு அதிரடிப்படையினரும் 20 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கிளைமோர் குண்டுத் தாக்குதல் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
Monday, May 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)






இந்த கிளைமோர் தாக்குதல்கள் நிச்சயம் அரசின் சதி வேலை தான்.
ReplyDelete