[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] இணுவில் கந்துசாமி கோயில் குருக்களிடம் பல லட்சம் ரூபாய் நிதியினை கப்பமாக கேட்டு யாழ். ஸ்ரான்லி வீதியில் உள்ள சிறீதர் தியட்டரில் முகாம் அமைத்து தங்கியுள்ள ஈ.பி.டி.பி. தேசவிரோத ஒட்டுக்குழுவினர் தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தவர்களும் தொடர்ந்து ஈ.பி.டி.பி ஒட்டுகுழுவினரால் நிதிகேட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அச்சமடைந்து இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது யாழ். குடாநாட்டில் படைப்புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழவினராலும் பிரசித்தம் பெற்ற இந்து ஆலயக்குருக்களிடம் லட்சக்கணக்கான நிதிகப்பமாக தமக்கு வழங்கவேண்டும் என்று மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இவற்றை வெளியில் சொன்னால் கொல்லப்படுவீர்கள் என மிரட்டப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Tuesday, May 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.