[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] கொழும்பு இரத்மலானையில் உள்ள பெலக்கடச் சந்திக்கும் மலிபன் சந்திக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 7 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 30 பேர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலில் சிக்கியவர்கள் சிறப்பு பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினர் என்று கூறப்படுகின்றது. விசீடி கடை ஒன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே தொலைதூர இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம், 4 வான்கள், 2 கார், 3 முச்சக்கர வாகனங்கள், 2 உந்துருளிகள் ஆகியன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை அதிரடிப்படையினரின் முகாமைச் சேர்ந்த டிறக் வாகனம் கற்ருகுருன்ட காவல்துறை பயிற்சி முகாமிற்கு கடந்த சனிக்கிழமை வந்ததாகவும், அது பின்னர் சிறப்பு பயிற்சி ஒன்றிற்காக சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வேளை கிளைமோரில் சிக்கியுள்ளது. இந்த வாகனத்தில் அதிரடிப்படையினரின் உப பரிசோதகர் உட்பட 9 வீரர்கள் பயணம் செய்துள்ளனர். குண்டு பொருத்தப்பட்ட கடையானது கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு சொந்தமானது. இது வேறு ஒரு தரப்புக்கு வீடியோ கடை நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. எனினும் குண்டு வெடித்த நேரம் கடை உரிமையாளரால் தனது கடைக்கு அருகில் உள்ள கடையில் சந்தேகத்திற்கு இடமான சிலரின் நடமாட்டங்கள் இருந்ததாக கல்கிசை காவல் நிலையத்தில் மருத்துவமனை பணியாளரால் புகார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு இளைஞர்கள் தனது கடைக்கு அருகில் உள்ள கடை ஒன்றிற்குள் பிரவேசித்தாகவும். கடையை சுத்தம் செய்யத பின்னர் அவர்கள் வெளியேறி விட்டதாகவும் வீடியோ கடை உரிமையாளர் மருத்துவமனை பணியாளருக்கு தெரிவித்தாக கூறப்படுகின்றது. அருகில் இருந்த இரு கடைகளும் சில காலங்களாக பூட்டப்பட்டு கிடந்தமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்த அதிரடிப்படையினரில் ஒருவரினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tuesday, May 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.