[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007] வவுனியா தவசிக்குளத்தில் வைத்து படையினரால் ஊர்தியில் கொண்டுவரப்பட்டு நெற்று முன்தினமிரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட வெளியிடத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் படைப்புலனாய்வாளர்களும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் இப்பகுதிக்கு கடத்திவரப்பட்டு கண்கள், கைகள் கட்டப்பட்டு தலையின் பிறடிப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விளைஞர்கள் இருவரின் சடலங்களும் தற்பொழுது வவுனியா வைத்தியசாவையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, May 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.