[திங்கட்கிழமை, 21 மே 2007]
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில்,
சிறிலங்காவின் புத்தளம் பகுதியில்தான் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. புத்தளம் பகுதியானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி அல்ல. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள்தான் மீனவர்களை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:புதினம்
Monday, May 21, 2007
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளத்தில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்: "டெக்கான்" ஏடு.
Monday, May 21, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.