[புதன்கிழமை, 30 மே 2007] மன்னார் மாவட்டம் மடுப் பகுதியின் ஊடாக சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மடுப்பகுதியின் ஊடாக இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இம் முன்னநகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடும் எதிர்த்தாக்குதலினால் இராணுவத்தினர் அதிக இழப்புக்களுடன் கொல்லப்பட்ட, காயமடைந்த இராணுவத்தினருடன் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவத்தில் தமது தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மடுப்பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் தமது தரப்பில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Wednesday, May 30, 2007
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு.!!
Wednesday, May 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.