[புதன்கிழமை, 30 மே 2007]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்றும் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இன்று புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வந்த மூன்று மிக் - 27 ரக வானூர்திகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் வரை குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த நிலக்சனா (வயது 07) என்ற சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபங்கள் சிலவற்றின் சுவர்களில் சிறுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் அச்சத்தினால் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்று இப்பகுதியில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் வந்த மூன்று மிக் - 27 ரக வானூர்திகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் வரை குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த நிலக்சனா (வயது 07) என்ற சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபங்கள் சிலவற்றின் சுவர்களில் சிறுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் அச்சத்தினால் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்று இப்பகுதியில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.