Thursday, May 31, 2007

சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்டர்.ராமதாஸ்.

வியாழக்கிழமை, 31 மே 2007

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்தியத் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக் தீர்வு காண விரும்புவதாகவும். இந்திய அரசு ஆயுதஉதவி வழங்குவதை எதிர்ப்பதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் இதுதொடர்பில் மத்தியில் அரசு ஆயுதஉதவி வழங்குவதை நிறுத்த உத்தரவாதம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

pathivu

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.