[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழகு (வயது 56) கொல்லப்பட்டுள்ளார்.
வேணாவிலைச் சேர்ந்தவர்களான வி.இராசையா (வயது 60), நீ.ஜெயகதீஸ்வரி ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான்குண்டுத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழகு (வயது 56) கொல்லப்பட்டுள்ளார்.
வேணாவிலைச் சேர்ந்தவர்களான வி.இராசையா (வயது 60), நீ.ஜெயகதீஸ்வரி ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான்குண்டுத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
நன்றி:புதினம்






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.