Thursday, May 17, 2007

ஓமந்தை சோதனை நிலையம் திடீர் மூடல்: பாரிய நெருக்கடியில் பெருமளவான மக்கள்.

[வியாழக்கிழமை, 17 மே 2007]


வவுனியா புளியங்குள பிரதேசம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திவிட்டு ஓமந்தை சோதனை நிலையத்தை மூடியதால் பெருமளவான மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியை நோக்கி இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து முற்பகல் 11.20 மணிக்கு ஓமந்தை சோதனை நிலையத்தை இராணுவத்தினர் மூடினர். இதனால் வன்னியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மக்கள் மற்றும் நோயாளர்களும் வவுனியாவிலிருந்து வன்னி நோக்கி பயணித்த பெருமளவான மக்களும் பாரிய நெருக்கடிக்குள்ளாகினர். ஓமந்தை சோதனை நிலையத்தில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவும் தமது கண்காணிப்பை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனிடையே வவுனியா பாலமோட்டை மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று சிறிலங்கா இராணுவத்தினர் தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.