Tuesday, May 29, 2007

வவுனியாவில் கிளேமோர் குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.!!

[செவ்வாய்க்கிழமை, 29 மே 2007]


வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் வீட்டின் கிணறு அருகில் குண்டு வெடித்ததில் மூவர் பலியாகினர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கிணற்றுக்கு உள்ளேயும், மற்றொன்று கிணற்றடியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி சுரேஸ்குமார் (வயது 32), சந்திரன் தனுசன் (வயது 26), சதீஸ்குமார் ஆகியோர் பலியானோர் எனத் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஒட்டிசுட்டானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் வழமை போல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்றும் அவர்கள் தயாரித்த குண்டு முன்கூட்டியே வெடித்தததாகவும் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.