Thursday, May 31, 2007

யாழ் குடாநாட்டில் பாரிய சோதனை நடவடிக்கை.

[வியாழக்கிழமை, 31 மே 2007] யாழ் குடாநாட்டில் பாரிய சோதனை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை தொடக்கம் மதியம் வரையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினரும் சிறீலங்கா காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ் நகரம், கொட்டடி, நாவாந்துறை கடற்கரைப் பிரதேசம் ஆகியன முழுமையான தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ் நகரை இணைக்கும் அனைத்து பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுதப்பட்டு கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் கொட்டடி மற்றும் நாவாந்துறையில் கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட படையினர் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடக்கூடியதாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.