Wednesday, May 30, 2007

சிறீலங்கா தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல: அவர்கள் தமிழ்நாட்டில் போரிடட்டும் - ஜா.ஹெ.உ

[புதன்கிழமை, 30 மே 2007] சிறீலங்கா தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல எனவும், அவர்கள் தமிழ்நாட்டிலேயே தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். ஜப்பானியர்களுக்கு ஜப்பான் போன்று, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து போன்று, தமிழர்களுக்கு தமிழ்நாடு எனவும், அவர்களை சிறீலங்காவில் ஒரு இனமாகக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தமது கட்சியின் தீர்வுத் திட்டத்தை கையளித்த பின்னர், ஜாதிக ஹெல உறுமய இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தமது தீர்வுத் திட்டத்தில் சிறீலங்காவிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 270 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனவும், அவர்களில் 200 பேர் தொகுதிவாரியாகவும், 40 பர் தேசிய பட்டியல் மூலமும், 22 உறுப்பினர்கள் தொழிற்சங்களில் இருந்தும், 5 பேர் சிறிய கட்சிளின் உறுப்பினர்களாவும், 3 பேர் சிறுபான்மைக் கட்சிகள் சார்பாகவும், ஒருவர் வேடர் இனத்தில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தீர்வுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை 20 முதல் 25 உறுப்பினர்களைக் கொண்டதாகக் குறைக்கப்பட வேண்டும் எனவும், ஆகக் கூடியது 30 துணை அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.