[திங்கட்கிழமை, 28 மே 2007, 18:03 ஈழம்]
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் சிறப்பு அதிரடிப்படையினின் ட்றக் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இன்று நடத்தபபட்ட கிளைமோர் தாக்குதலில் 2 பெண்கள் உட்பட பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 அதிரடிப்படையினர் உட்பட 21 பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இரத்மலானையில் காலி வீதி பெலக்கட சந்திக்கு அருகில் வைத்தே இன்று திங்கட்கிழமை மாலை சுமார் 5.45 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம் வந்துகொண்டிருந்த போதே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.
பெரும் அதிர்வுடன் கிளைமோர் வெடித்துச் சிதறிய போது அதிரடிப்படையினர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த 9 படையினரில் நால்வர் படுகாயமடைந்த அதேவேளையில் 6 பெண்கள் உட்பட பொதுமக்களிலும் பலர் படுகாயமடைந்தார்கள்.
பெலக்கட சந்திக்கு அருகில் அமைந்துள்ள கடை ஒன்றில் இந்த கிளைமோர் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என விசாரணைகளை நடத்திவரும் காவல்துறையினர் தெரிவித்தனர். கிளைமோர் குண்டுத் தாக்கத்தினால் 2 உந்துருளிகளும், கார் ஒன்றும் பலத்த சேதமடைந்திருக்கின்றன. அருகே உள்ள கட்டடங்கள் சிலவும் சேதமடைந்திருக்கின்றன.
படுகாயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 பேரில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனைவிட பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவரும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரில் பெண் ஒருவரும் மரணமடைந்துள்ளார்கள்.
இதனைவிட கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மற்றைய இருவரது நிலைமைகளும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொல்லப்பட்ட ஏழு பேரில் மூவர் மட்டுமே இன்று இரவு வரையில் அடையாளம் காணப்பட்டனர். தமது உறவினர்கள் யாராவது கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் என்பதைக் கண்டறிவதற்காக இரவு வரையில் பெருந்தொகையான பொது மக்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதி போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், கொழும்பில் பதற்ற நிலைமையும் காணப்பட்டது.
தலைநகர் கொழும்பில் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து ஒரு வார காலப்பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
கடந்த வியாழக்கிழமை காலை புறக்கோட்டை, துறைமுகப்பகுதியில் படையினர் பயணம் செய்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. ஒருவார காலப்பகுதியில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நன்றி:புதினம்
Monday, May 28, 2007
(4 ஆம் இணைப்பு) இரத்மலானை கிளைமோர் தாக்குதலில் பலியானோர் தொகை 7 ஆக உயர்வு.!
Monday, May 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.