Friday, February 02, 2007

நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வன் சந்தித்து விரிவான பேச்சு.!!!

[Friday February 02 2007 ]

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிராஸ்கர் நேற்று புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தரைமார்க்கமாக காலை கிளிநொச்சிக்கு சென்ற தூதுவருக்கும் தமிழ்ச்செல்வனுக்குமிடையில் புலிகளின் சமாதான செயலகத்தில் சந்திப்பு இடம் பெற்றது.


ஒரு மணி நேரம் இடம் பெற்ற இச்சந்திப்பில் சமாதான முயற்சியின்தற்போதைய நிலை, கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது தொடர்பில் தமிழ்ச்செல்வன் விசனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.