[08 - February - 2007]
அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் தொடர்பான செய்தியை ஒளிபரப்பியது தொடர்பாக எம்.ரீ.வி. மற்றும் எம்.பி.சி. செய்தி இயக்குநர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் அநுராவின் இந்தப் பேட்டி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பாகியது.
இந்தப் பேட்டியில், தனக்கும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து அநுரா விரிவாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அன்று இரவு இது தொடர்பாக எம்.ரீ.வி. மற்றும் எம்.பி.சி.செய்தி இயக்குநர் சுசில் ஹிந்தல்பிட்டியவுடன் தொடர்பு கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் லுகொட, அநுராவின் பேட்டியின் பிரதி ஒன்றை வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதேநேரம், நேற்றுக் காலை மேற்படி அலுவலகத்துக்குச் சென்ற பொலிஸ் குழு, அமைச்சர் அநுராவின் பேட்டி தொடர்பாக ஹிந்தல்பிட்டியவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன் போது, அமைச்சர் அநுராவின் வேண்டுகோளின் பேரிலேயே அவரைத் தாங்கள் பேட்டிகண்டு அதனை ஒளிபரப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Thursday, February 08, 2007
அநுரா வழங்கிய பேட்டி தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை.!!
Thursday, February 08, 2007





