[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]
மனித உரிமை மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துறையின் பேச்சாளராக செல்வி நியமிக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ சமாதான செயலகத்தின் நிர்வாகிகளின் ஒருவராக செல்வி பணியாற்றியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் தொடர்பாக சமாதானச் செலயகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கருத்து தெரிவிக்கையில் "சிறிலங்கா படைத்துறையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள எமது தாயகப்பகுதியின், மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் அனைத்துலக ஊடகங்களுக்கும், மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் தெரிவிப்பதற்கு வசதியாகவே, எமது தலைமை இந்த நியமனத்தை வழங்கியுள்ளது" என்றார்.
தமிழீழ சமாதான செயலகத்தின் நிர்வாகிகளின் ஒருவராக செல்வி பணியாற்றியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் தொடர்பாக சமாதானச் செலயகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கருத்து தெரிவிக்கையில் "சிறிலங்கா படைத்துறையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள எமது தாயகப்பகுதியின், மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் அனைத்துலக ஊடகங்களுக்கும், மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் தெரிவிப்பதற்கு வசதியாகவே, எமது தலைமை இந்த நியமனத்தை வழங்கியுள்ளது" என்றார்.





