Friday, February 16, 2007

யாழ். ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தல்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளுக்கான யாழ். ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) நேற்று வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போய் உள்ளார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றை வடமராட்சியின் கரவெட்டியிலுள்ள அரசடிப் பகுதியில் நடத்தி வரும் இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், தனது கல்வி நிலையத்தை மூடிவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழியில் காணாமல் போயுள்ளார்.

இவரை ஈபிடிபியினர் கடத்தியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், நெல்லியடி காவல் நிலையத்திலும் இந்த கடத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி, துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரன், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதிலிருந்து கடந்த 5 வருடங்களாக, இரு பத்திரிகைகளுக்கும் யாழ். பிராந்தியத்தின் பிரதான ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம்:புதினம்.கொம்