Friday, February 16, 2007

முகமாலை, மணலாறு பகுதிகள் மீது உக்கிர எறிகணை வீச்சு .

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

யாழ். முகமாலை இன்று காலை முதல் கடும் எறிகணை வீச்சில் ஈடுபட்டிருந்த சிங்களப் படைகள் மாலை தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேவேளை இன்று மாலை முதல் மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிங்களப் படைகள் முல்லை மாவட்டத்தின் மீது கடுமையான எறிணை வீச்சை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் வடபோர் முனையின் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகள் மீது கடுமையான எறிகணை வீச்சுடன் வான் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிங்களப் படையின் எறிகணை வீச்சு இன்று மாலை முதல் உக்கிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மணலாற்றுப் பகுதியில் நிலை கொண்டுள்ள சிங்களப் படைகளும் இன்று மாலை முதல் கடுமையான எறிகணை வீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாரிய படை நடவடிக்கை ஒன்றிற்கான முன்னேற்பாடாகவே சிங்களப் படைகள் எறிகணை வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.