செவ்வாய் 30-01-2007
இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்
இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார்
ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகமவும் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை இனப்பிரச்சினையுடன் நெருக்கமான தொடர்புடையவர்களின் இந்திய விஜயமானது இந்தியாவின் புதிய அரசியல் நகர்வாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்ட மாதிரியுடன் பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாய்காகவும் பாலித கோகனவும் இந்தியா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த தீர்வு திட்டம் குறித்து இந்திய அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
Tuesday, January 30, 2007
இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்தம்?!!!
Tuesday, January 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.