செவ்வாய் 30-01-2007
காலியில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கா தூதுவர் ரொபேட் ஓ பிளேக் சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
மனிதநேய பணிகளில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்களின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தென்னிலங்கை ஊடகங்கள் முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்றும் மோதல்கள் நிகழும் பகுதியில் அமெரிக்க அரசாங்க அமைப்பான யு.எஸ்.எயிட் நிறுவனமும் அதன் பங்காளிகளான சில அரசசார்பற்ற நிறுவனங்களும் சுதந்திரமாக செயலாற்றுவதற்கு இடையூறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Tuesday, January 30, 2007
யுத்தத்தின் மூலம் தீர்வை ஏற்படுத்த முடியாது - அமெரிக்கா.!!!
Tuesday, January 30, 2007





