யாழ்பாண பல்கலைக்கழகம் மீளதிறப்பதில் தாமதம்
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நேற்று செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் யாழ்பல்கலைக்கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி மீள ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் இன்னமும் சிலவாரங்களுக்கு மீள ஆரம்பிப்பது பிற்போடப்படுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வதிவிடங்கள் மற்றும் இதரவசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவும் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிப்தில் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும் எனபதில் துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வெளியிடமாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாதுகாப்பு உத்தரவாதம் என்பனவும் தாமதத்திற்கு காரணங்களாக அமைகின்றன அதற்கு உதாரணமாக அண்மையில் ஆறுமுகநாதன் நிருபராஜ் மற்றும் இணுவில் பகுதியில் கடத்தப்பட்ட இருமாணவர்கள் போன்ற உதாரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்களுக்கே வதிவிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வசதிகள் உள்ளதாகவும் ஆனபோதும் யாழ்மாவட்ட மாணவர்கள் தவிர்ந்த 800 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாகவும் மற்றும் 200 மாணவர்கள் யாழ் தீவகம் மற்றும் தென்மராச்சி பகுதி மாணவர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
எனினும் பல்கலைக்கழகம் மேலும் 600 மாணவர்களுக்கு தனியார் வதிவிடங்களை ஏற்பாடு செய்துகொடுப்பதற்கு முயல்வதாகவும் 1000 மாணவர்களுக்கு போதிய உணவு வழங்குவது தொடர்பில் யாழ் அதிபருடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
Wednesday, January 17, 2007
யாழ்பாண பல்கலைக்கழகம் மீளதிறப்பதில் தாமதம்
Wednesday, January 17, 2007





