Wednesday, January 31, 2007

மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல்: 11 பேர் பலி

புதன்கிழமை, 31 சனவரி 2007


மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்திற்கு மிக அருகில் வெடிக்க வைக்கப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையினரின் வாகனம் சிக்கியதில் 7 காவல்துறையினரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.


இத்தாக்குதலில் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 இராணுவத்தினரும் 5 காவல்துறையினரும் 3 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று புதன்கிழமை காலை 11:20 மணியளவில் புறப்பட்ட இராணுவ வாகனத்தில் மொத்தம் 30 பேர் இருந்ததாகவும், கிளைமோர் குண்டில் வாகனம் அகப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த இராணுவத்தினர், பொலநறுவை மற்றும் கொழும்பு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பொதுமகன், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.