புதன் 31-01-2007 யாழ். ஆறுகால்மடம் கோம்பயன்மணல் மயானத்துக்குச் சமீபமாக வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் காணாமற்போன சுதுமலை மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த குணரத்தினம் கஜேந்திரன் (அகவை30) என்பவரின் சடலம் அதுவென்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கடந்த வியாழக்கிழமை கடமைக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும் பின்னர் காணாமற்போயிருந்தார் என்றும் உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர். வடமராச்சியில் ஒருவர் கொலை வடமராச்சி கரவெட்டி இராஜ கிராமத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் வலது குறைந்த நபர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இராமையா தர்மசீலன் (அகவை32) என்பவரே கொல்லப்பட்டவராவார். கரவெட்டியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த சமயம் சுடப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Wednesday, January 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.