Thursday, December 28, 2006

போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்கு..

போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் மீள ஒழுங்குபடுத்தி தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தமை தெரிந்ததே. வாகரை மீள கைப்பற்றப்படும் என்ற பகிரங்க அறிவித்தலுடன் முழுவளவில் திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தமது எதிர்கால செயற்பாட்டின் செல்நெறியை தீர்மானிக்கும் முக்கிய கட்டத்தை தாம் இருப்பதாக கருதும் கண்காணிப்புக்குழு மீளஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.