Saturday, December 30, 2006

புளொட் உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

புளொட் உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு புத்தளத்திலிருந்து கடந்த புதன்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட புளொட் என்றழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கல்கமுவ காவல்துறைப் பிரதேசத்தில் குருநாகல் மெதகம வீதியில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மாமா என்று அழைக்கப்படும் பாக்கியராஜா மற்றும் கரிகாலன் ஆகியோர் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்தவர்களால் புத்தளம் சேனைக்குடியிருப்பில் உள்ள வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். மாமா என்றழைக்கப்படும் பாக்கியராஜா புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டிருந்தார்.