Saturday, December 30, 2006

மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நான்கு விடுதலைப் புலிகள் காயமடைந்துள்ளனர்.