பெரியநீலாவணை விஷ்னு கோவிலின் தலைவர் கொலை மட்டக்களப்பு பெரியநீலாவணை விஷ்னு கோவிலின் தலைவரான திரு.ருபேஸ்(32) என்பவர் இன்று இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் தனது வீட்டிலிருந்த சமயம் வீட்டிற்கு வந்த இனம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிப்பிரயோகத்தினை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். குறித்த நபரது வீடு கோயிலுக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது





