Thursday, November 30, 2006

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம் வனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லாரி சிங்கள மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்த ஆயுதாரிகள் சிலர் அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை அச்சுறுத்தியதையடுத்து பாதுகாப்பு காரணமாக இன்று அதிகாலை முதல் அங்கிருந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கல்லூரியில் நடத்தப்படவிருந்த உள்ளக பரீடசைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் கல்லூரியை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மூடவும் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.