Tuesday, November 28, 2006

பிரபாகரன் தனியரசை அமைக்க முயற்சித்தாலும் அராசங்கம்...

பிரபாகரன் தனியரசை அமைக்க முயற்சித்தாலும் அராசங்கம் சமாதான பேச்சுக்களை நடத்துவதை அரசாங்கம் கைவிடாது - பிரதமர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனியரசு அமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அரசாங்கம் கைவிடாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறைகளை கைவிட வேண்டும் என பிரதமர் வியட்நாமில் நேற்று 28. 11 தெரிவித்துள்ளார். மாவீரர் தின உரையின் பின்னரே இந்த கருத்து பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுடன் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரத்தை பரவலாக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை நிறுத்த போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இரட்டை அதிகாரம் மற்றும் இரண்டு அதிகார சபைகளை உருவாக்க முடியும் இந்த இரண்டுக்கும் இடையில் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள முடியும் அவர் சுட்டிக்காட்டினார்.