மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பகுதிகளில் 72 000 பேர் இடப்பெயர்வு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டவரும் கடும் எறிகணை வீச்சுகாரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறியமுடிகிறது. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக அறிக்கைப்படி 41 463 பேர் திருகோணமலை மாவட்டத்திலும், 30 630 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்துக்க இடம்பெயர்ந்தள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை 14 கிராமசேகவர் பிரிவில் உள்ள 22 தற்காலிக வதிவிடமுகாங்களில் தங்க வைத்திருப்பதாக மாவட்ட பிரதேசசெயலர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னர் இவ்வாறு இடம்பெயர்ந்து விக்னேஸ்வரா கல்லூரியில் தற்காலிகமாக தங்கியிருந்து மக்களில் சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல் காரணமாக 45 பேர்கொல்லப்பட்டும் 125 பேர் காணமடைந்தமை யாவரும் அறிந்ததே





