சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும் -மனத உரிமைகள் குழு
சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடனடியாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்தத்தபடுவதை தடுக்க வேண்டும். எனவும் அத்துடன் கடத்தபடுபவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்த்துவிடவேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு இன்று செவ்வாய்கிழமை விடுத்த அறிகையில் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் அமைபான கியுமன் ரைட் வாட்ச்(Human right watch) அடுத்த மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிலங்கா அரசப்படையினர் மற்றும் பொலிஸார் சிக்கலடைந்துள்ள நிலையில் அதே நேரம் நேரடியாக சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்..
எனவும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மற்றும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியுயோக்கினை தளமாக கொண்டமைந்த இந்த மனித உரிமைகள் அமைப்பு -"தம்மிடம் சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு நேரடியாக சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடந்தையாக இருந்துள்ளனர்.
என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் "தெரிவித்துள்ள இந்த அமைப்பின் சிறுவர் நலன் உரிமைகள் வழக்கறிஞர் ஜொ பெக்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா சிறார் உரிமைகள் நலன் பிரதிநிதி அலன்றொக் இதே கருத்தினை தனத் 10 நாள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
Tuesday, November 28, 2006
சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் ...
Tuesday, November 28, 2006





