மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன இன்று செவ்வாக்கிழமை காலை 9.00 மணியளவில் 120 லொறிகளில் மட்டக்களப்பு வாகரைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு மற்றும் மருந்து பொருள்கள் மாங்கேணி இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து 85 லொறிகள் மற்றும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் 35 லொறிகளும் சென்றுள்ளது. இவைகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மறுத்துள்ளார்கள். ஐ.சி.ஆர்.சி மற்றும் யு.என் நிறுவனங்களின் உதவியுடன் உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சென்ற போதும் எவ்வித முடிவுமின்றி வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.





