வாகரை நோக்கிய படைநகர்வு முறியடிப்பு - போராளி வீரச்சாவு. மட்டக்களப்புபு வாகரை நோக்கிய சிறீலங்காப் படையினரின் ஊடுருவல் முயற்றி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் மாங்கேணி படைமுகாமிலிருந்து எறிகணை வீச்சுக்களுடன் படைநகர்வை மேற்கொண்டனர். படையினரின் படைநகர்வை அடுத்து விடுதலைப் புலிகளால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பாடையினர் பாரிய இழப்புகளுடன் படைநகர்வைக் கைவிட்டுவிட்டு தப்பியோடினர். இன்றை முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளார்.





