தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கூடி தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளை வடமராட்சி வல்வெட்டித் துறையில் கேக்குகள் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரமும் இடம் பெற்றுள்ளது. படைத்தரப்பினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்ட போதிலும் மக்கள் தேசியத் தலைவரின் மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை தமது உயிருக்கு படைத்தரப்பினரின் ஆபத்துக்கள் இருக்கின்ற போதிலும் மிகவும் துணிச்சலாக இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





