Friday, November 24, 2006

மட்டக்களப்பில் கருணாகுழுவினரால் அரசசார்பற்ற ...

மட்டக்களப்பில் கருணாகுழுவினரால் அரசசார்பற்ற நிறுவனப்பணியாளர் சுட்டுக்கொலை! மட்டக்களப்பு- நீலாவணைப் பிரதேசத்தில் நேற்று இரவு 8.00 மணியளவில் கருணாகுழுவினரால் அரசசார்பற்ற நிறுவன பணியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரீ.டி.எச் அரச சார்பற்ற நிறுவனப்பணியாளரான ருபேஸ் (வயது30) என்பவரே கருணா குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவர் தனது வீட்டில் ரீ.வி பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளைநிற ஹயஸ் வானில் வந்த கருணாகுழுவினர் இவரை வெளியில் அழைத்துச்சென்று சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து இயங்கும் கருணாகுழுவினரின் முக்கியஸ்தரான கரன் மற்றும் அவரது சகாக்களாலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெரியகல்லாறு பிரதேசத்துக்கு நேற்று மாலை 6மணியளவில் வெள்ளைநிற ஹயஸ் வானில் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர் நீலாவணைப்பிரதேசத்துக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.