Monday, October 30, 2006

மழைக்கு இருக்க முடியாது திண்டாடும் மக்கள்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மற்றும் தென்மராட்சிப்பகுதிகளில் உள்ள மக்கள் பலர் தமது வீடுகளில் மழை பெய்யும் நேரத்தில் குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படைத்தரப்பினர் தொடர்ச்சியாக மேற் கொண்டு வரும் ஆட்லறி தாக்குதல்களின் அதிர்வு காரணமாக இப் பகுதியில் உள்ள விடுகள் பலவற்றினதும் ஓடுகள் விலகி காணப்படவதினால் மழை பெய்யத் தொடங்கியதும் ஒழுகுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது குறிப்பாக பலாலி ஊரெழு மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் படை முகாம்களுக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட வீடுகள் அனைத்தும் இத்தகைய நிலமைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் ஏற்க்கனவே இப் பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலமையில் சில நூற்றுக் கணக்கான வீடுகளே இப் பகுதிகளில் திருத்தப்பட்டு பொது மக்கள் குடியிருந்து வருகின்றார்கள் தற்போதைய தொடாச்சியான எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக திருத்தப்பட்ட வீடுகளும் கூட அதிவுகள் காரணமாக ஓடுகள் விலகி காணப்படுவதினால் ஓழுகும் நிலமைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்