Monday, October 30, 2006

யாழ்பாணத்தில் மருந்தகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மூன்ற மாதங்களாக மருந்துப் பொருட்கள் எடுத்து வரப்படாமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்கள் பலவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முக்கியமான மருந்து வகைகள் சிலவற்றை மட்டும் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதரர வையித்திய அதிகாரி எடுத்து வர நடவடிக்கைகள் மேற் கொள்கின்ற போதிலும் ஏனைய மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது குறிப்பாக நாளாந்தம் தலையிடி காச்சல் என்பவற்றிற்கு பயன்படுத்தப்படும் பனடோல் கூட பெற முடியாத நிலமை காணப்படுகின்ற நிலமையே தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது மருந்தகங்களில் காணப்படும் இத்தகைய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை காரணமாக வைத்துக் கொண்டு குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின் விலையையும் கூட ஒரு சிலர் கூட்டிவிற்று பெரும் இலாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்