Monday, October 30, 2006

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை.

இன்று திங்கட்கிழமை முற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இராணுவப்புலனாய்வுப்பிரிவனரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து சேருநுவர பிரதேசத்தில் பதட்டமான ஒரு நிலை தோன்றியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.