Sunday, October 29, 2006

துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தை ....

ஏறாவூரில் ஆயுததாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தை உட்பட மூவர் காயம். ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட வந்தாறுமூலையில் நேற்று சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் இனம் தெரியாத ஆயுத தாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில ஒரு குழந்தை உட்பட் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குழந்தை யதுர்சன் (அகவை 01 )பி.விவேகானந்தன் (அகவை 22 )பி.செல்வராணி (அகவை 19 ) பி.வினோதினி (அகவை 11 ) ஆகியோரே காயமடைந்தவர்கள். இளைஞனை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.