வாழைச்சேனை காவல்துறை பகுதியான நாசீவன்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பதுங்கியிருந்த இராணுவத்தினால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ரஞ்சன் தேவன் (அகவை 22) என அடையளம் காணப்பட்டுள்ளது. இவர் வாழைச்சேனை கிண்ணையடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தேவையின் நிமிர்த்தம் சென்றவேளையில் இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





